News
#ThanthiSpaces #Congress #PrashantKishor
2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக,வெற்றிகரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரசாந்த் கிஷோருடன், காங்கிரசின் பேச்சு வார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், காங்கிரஸின் வெற்றிக்கு பிரசாந்த கிஷோரின் வியூகங்கள் மட்டும் போதுமா? என்ற டிவிட்டர் ஸ்பேஸ் விவாதத்தில் காங்கிரசின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அரசியல் விமர்சகர் சுமந்த்.சி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

