ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறாரா ஆளுநர் ரவி? | Solratha Sollitom - 06/04/2023
Society & Culture
* சுப்ரீம் கோர்ட்டு 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
* சபாநாயகர் அப்பாவுவைப் புகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம்
* புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
* "நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள்தான். . இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். "ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" - அபிராமி ஐயர்
* தாஜ்மகால் மற்றும் குதுப்மினாரை இடிக்க வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி தெரிவித்துள்ளார். முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் இந்த இரண்டு முக்கிய நினைவுச் சின்னங்களையும் இடிக்க வேண்டும் என்று மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
* "கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள்" - ஆளுநர் ரவி
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

