Miscellaneous
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. - இந்தியாவில் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அணைக்கு சென்று 2 மதகுகள் மூலம் இடுக்கி அணைக்கு 517 கன அடி நீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.