சிறுபான்மையினர்' இழிவான சொல்லா? - சீமானின் விதண்டாவாதம்! | Solratha Sollitom-03/08/2023

Share:

Solratha sollitom| Hello Vikatan

Society & Culture


* கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபாநாயகர் ஜகதீப் தன்கர் இடையே நடந்த சுவாரஸ்யமான விவாதம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதற்கான காரணத்தை நாங்கள் கூறிய போதும் நீங்கள் அதை ஏற்கவில்லை. நேற்று இது தொடர்பாக உங்களிடம் கோரிக்கை வைத்த போது, நீங்கள் கோபமாக இருந்தீர்கள்" என்று கூறினார்இதைக் கேட்டு சிரித்தபடி சபாநாயகர் ஜகதீப் தன்கர், "எனக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. நான் எப்போதும் கோபப்பட மாட்டேன்" என்றார். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, "வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் நீங்கள் கோபமாகவே இருக்கிறீர்கள்" என்றார். இந்த உரையாடலால் அவையில் சிரிப்பலை எழுந்தது. 

* அரியானாவில் கலவரம், வன்முறை

* "சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

* நாள்தோறும் ஏற்படும் அமளியால், சபையின் மாண்பு குலைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாமல், 'கண்ணியத்துடன் எம்.பி.,க்கள் நடந்து கொள்ளும்வரை, லோக்சபாவுக்குள் வரமாட்டேன்' என்று, சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுத்துள்ளார்.

* மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ராகுல், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.

* நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நவம்பரில் முடிவெடுப்போம் என தினகரன் தெரிவித்துள்ளார். காங்கிரசுடனும் கூட்டணி இருக்கலாம்; பாஜகவுடனும் கூட்டணி இருக்கலாம் எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.

பேசுவதும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அதை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

-Solratha Sollitom.