News
நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூரி இந்த புதிய படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர் இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

